ஆந்திர மாநிலம் திருமலை திருப்பதியில் அனுப்பிரியா என்ற இடம் அருகே சேஷாசலம் வனப்பகுதி அமைந்துள்ளது. சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக செம்மரத் தடுப்புப் பிரிவு காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் ஒரு கார் ஒன்று வனத்தை நோக்கிச் சென்றது. இதைக் கண்காணித்த செம்மர தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த காரை ரகசியமாக பின் தொடர்ந்து சென்றனர்.
சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தமிழ்நாடு!
அந்த கார் வனப்பகுதிக்குள் சென்றது. அப்போது சிலர் செம்மரக் கட்டைகளை எடுத்துக் கொண்டு காரில் ஏற்ற வந்தனர். அப்போது காவல்துறை அவர்களைச் சுற்றி வளைக்க முயன்றனர். இதைப் பார்த்த கடத்தல்காரர்கள் கட்டைகளை ஆங்காங்கே வீசிவிட்டு, வனப்பகுதிக்குள் ஓட்டம் பிடித்தனர்.